பெங்களூரு வன்முறை... ரிசர்வ் செய்தவர்களுக்கு 72 மணி நேரத்திற்குள் இலவச பயணம்- ஏர் ஏசியா சலுகை
பெங்களூரு:பெங்களூரிலிருந்து செப்டம்பர் 13ஆம் தேதி பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்கள் வேறொரு நாளில் இலவசமாக தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் போராட்டங்களால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று, செப்டம்பர் 13ஆம் தேதி பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களின் வசதிக்காக அந்நிறுவனம் இலவசப் பயணச்சலுகையை அறிவித்திருக்கிறது. இன்று, தாங்கள் பதிவு செய்த விமானத்தில் பயணிக்க முடியாதவர்கள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் தங்கள் பயணத்தை வேறு எந்த நேரத்திலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். அதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ஜெட் ஏர்வேஸ், விஸ்தாரா நிறுவனமும் விமான டிக்கெட்களை ரத்து செய்தால் அதற்கான கட்டணம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
பக்ரித் பண்டிகை, ஓணம் பண்டிகைக்காக பெங்களூருவில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு ரயில்கள், விமானத்தில் முன்பதிவு செய்தவர்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
போக்குவரத்து வசதி இல்லாமல் குறித்த நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வரமுடியாமல் போகும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏர் ஏசியா நிறுவனம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications