ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்... லாலுவை நெருக்கும் நிதிஷ்
ஊழல் முறைகேடு புகார்கள் குறித்து லாலு குடும்பத்தினர் முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா: ஊழல் முறைகேடு புகார்கள் குறித்து லாலு குடும்பத்தினர் முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் லாலுவுக்கு பீகாரில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.
ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது நடந்த பினாமி சொத்து பரிமாற்றம் தொடர்பாக, லாலு மகள் மிசா பாரதி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர், அவரிடம் 8 மணி நேர தொடர் விசாரணையும் அமலாக்கத்துறை நடத்தியது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, லாலு மனைவி ராபிரி ஆகியோரின் வீடுகளில் ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனையடுத்து நேற்று, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், " எனது கொள்கையில் எப்போதும் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
ஊழலுக்கு எதிரான எனது நிலைப்பாடு மிகவும் உறுதியாக உள்ளது. குடும்பத்தினரின் வீடுகளில் நடந்த சோதனைகள் குறித்து லாலு விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும்." என்று கூறினார்.
லாலு விவகாரம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், " ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டவர்கள் பொது மக்களை சந்திக்க வேண்டும். தங்கள் மீதான புகார்களிலிருந்து வெளிவர வேண்டும்.
இது போன்ற விவகாரங்களில், எங்கள் கட்சியின் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து முன்னுதாரணத்தை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications