குடிநீரில் விஷம் கலந்து இந்திய மக்களை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்! உளவுத்துறை உஷார்
டெல்லி: குடிநீரில் விஷம் கலந்து கூட்டமாக கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அணு ஆயுத தாக்குதலைவிட, இந்த பயோலாஜிகல் தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானிலுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் தீவிரவாத எண்ணம் கொண்ட அதிகாரிகளிடமிருந்து, வளைகுடா நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அணுகுண்டு மூலப்பொருட்களை பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், புதிய அச்சுறுத்தலாக பயோலாஜிக்கல் தீவிரவாதம் என்ற ஒரு வார்த்தை உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் உலவுகிறது. இதுகுறித்து ஒரு அதிகாரி கூறியதாவது: பொதுமக்கள் பயன்படுத்தும் நீர் தேக்கங்களில் பயோலாஜிக்கல் விஷத்தை கலந்து பொதுமக்களை கூட்டம் கூட்டமாக கொல்வது இதன் திட்டமாகும்.
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை முழுமையாக ஆட்சி செய்வதே இந்த தீவிரவாதிகளின் நோக்கமாகும். இந்த விஷப்பொருட்கள் காஷ்மீர், அசாம், பஞ்சாப் மாநிலங்கள் வழியாக கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதிகளில் உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் இதுபோன்ற சம்பவங்களை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர் நோய்வாய்ப்பட்டனர். ஆனால், கெமிக்கலின் அளவு குறைவாக கலக்கப்பட்டிருந்ததால் யாரும் உயிரிழக்கவில்லை. இதை ஒரு சோதனை முயற்சியாக தீவிரவாதிகள் செய்திருந்தனர். ஆனால், உயிர்கொலை செய்யும் அளவுக்கு அதிக கெமிக்கலை கலக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications