டெல்லி தேர்தல்.. வாக்கு மெஷினில் குளறுபடி செய்துவிட்டது பாஜக.. அடம் பிடிக்கும் அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லி மாநகராட்சி தேர்தலில்,பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கக் காரணம் ஓட்டு இயந்திரத்தில் குளறுபடி செய்ததுதான் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. ஓட்டு இயந்திரத்தில் குளறுபடி செய்துள்ள காரணத்தால் தான் பாஜக முன்னிலையில் உள்ளது என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில், வடக்கு, தெற்கு,கிழக்கு மண்டல மாநகராட்சிகளுக்கு கடந்த 22ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், பாஜக வாக்கு எண்ணிக்கையில் 180 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 45 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது.

பாஜக முன்னிலை வகிப்பதற்குக் காரணம், ஓட்டு இயந்திரங்களில் குளறுபடிகளைச் செய்ததுதான் என டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தல் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றபோது, காங்கிரஸ்,பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஓட்டு இயந்திரத்தில் செய்த கோளாறு காரணமாகவே பாஜக வெற்றியடைந்தது என ராஜ்யசபாவில் அமளியை உண்டாக்கினர்.
அதையடுத்து, தேர்தல் கமிஷனில் பழைய வாக்கு சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என காங்கிரஸ்,பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மனு அளித்தன.
இந்நிலையில்,பாஜகவின் டெல்லி மாநகராட்சி வெற்றியும் ஓட்டு இயந்திர கோளாறால் உண்டாக்கப்பட்ட வெற்றி என்று அர்விந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். ஆனால்,இதற்கு பாஜக எந்த பதிலும் கருத்தும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications