ராமர் கோவில் விவகாரத்தை பாஜக மறந்து விடவில்லை: சொல்வது மத்திய அமைச்சர் உமா பாரதி!
அவுரங்கபாத்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டு விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சி மறந்து விடவில்லை என்று பேசி மத்திய அமைச்சர் உமாபாரதி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி அவுரங்கபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாரதிய ஜனதா கண்டிப்பாக தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும். கூட்டணி அரசை மக்கள் விரும்பவில்லை தனிக்கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை பாரதிய ஜனதா மறந்து விடவில்லை. ஆனால் இதுதொடர்பான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.
மதத்தின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்ட காலம் கடந்து விட்டது தற்போது வளர்ச்சிதான் முக்கிய அம்சமாக உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எனது சகோதரர் போன்றவர். அவரை விமர்சிக்க போவது இல்லை.
இவ்வாறு உமாபாரதி கூறினார்.












Click it and Unblock the Notifications