தீவிரவாதத்தை ஒழிக்க பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை : பாஜக வாக்குறுதி
Recommended Video

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை 'சங்கல்ப பத்ரா' என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 75 வாக்குறுதிகளுடன் மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக தலைவர் அமித்ஷா, சுஷ்மா சுவராஜ் உள்பட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை ஒழிக்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாஜக எடுக்கும் என்றார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில், கடந்த 2014ம்ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், நாடு விரைவாக முன்னேறி வருகிறது. நாடு முழுவதும் பாஜக மின்சாரத்தை கொண்டு வந்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது. இந்தியா வல்லரசாக உருவாகி வருகிறது. பிரதமர் மோடி தீவிரவாதத்தை கடுமையாக எதிர்த்தார்" இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வாங்கப்பட்டு ராணுவம் வலிமைப்படுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மக்கள் நுழையுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications