பாஜக ஆளும், ஆள துடிக்கும் மாநிலங்களுக்கு அடித்தது ஸ்மார்ட் சிட்டி ஜாக்பாட்! பீகாருக்கு பெப்பே
டெல்லி: மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வாகியுள்ள 20 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நான்கு தென் மாநிலங்களில் இருந்தும் ஸ்மார்ட் நகரங்கள் தேர்வாகியுள்ளன. அதேநேரம், பீகார் மாநிலம் புறம் தள்ளப்பட்டுள்ளது. மம்தா ஆளும் மேற்கு வங்கத்திலும் எந்த நகரமும் தேர்வாகவில்லை.
முதல்கட்டமாக 20 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை இன்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். அதில் தமிழகத்தின், சென்னை மற்றும் கோவை நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சிறப்பு நிதி கிடைக்கும்.

தெற்கு வாழ்கிறது
கேரளாவிலிருந்து கொச்சியும், கர்நாடகாவில், பெலகாவி (பெல்காம்), தாவணகெரே ஆகிய நகரங்களும், ஆந்திராவிலிருந்து விசாகப்பட்டிணம், காக்கிநாடா ஆகிய நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனவே, 4 தென் மாநிலங்களில் கேரளா தவிர பிற 3 மாநிலங்களில் இருந்தும் தலா 2 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேர்வாகியுள்ளன.

பீகாருக்கு கல்தா
அதேநேரம், பாஜக கூட்டணியால் பெரிதும் சோபிக்க முடியாத தெலுங்கானா மாநிலத்தில் எந்த நகரமும் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதேபோல, சமீபத்தில், சட்டசபை தேர்தலில், படுதோல்வியை பரிசளித்த பீகார் மாநிலத்திற்கும் கிஃப்ட் கிடைக்கவில்லை.

மம்தாவுக்கு ஏமாற்றம்
எதிரும், புதிருமாக உள்ள மம்தா ஆளும் மேற்கு வங்கத்திற்கும் ஸ்மார்ட் பாக்கியம் கிடைக்கவில்லை. அதேநேரம், அதற்கும் கிழக்கே அமைந்துள்ள அசாமில், கவுகாத்தி இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அசாமில் இவ்வாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள மற்றும் பாஜக கூட்டணி வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப்பில், லூதியானா ஸ்மார்ட் சிட்டியாக தேர்வாகியுள்ளது.

டெல்லிக்கு தனி கவனிப்பு
தலைநகர் டெல்லியின் என்டிஎம்சி ஏரியாவும் ஸ்மார்ட் சிட்டியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் கவிழ்த்துவிட்டாலும், மக்களவை தேர்தலில் வாரி வழங்கியது டெல்லி என்பது பாஜகவுக்கு மறந்திருக்காது.

பாஜக ஆளும் மாநிலங்கள்
ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ஆகியவை ராஜஸ்தான் மாநில நகரங்கள், அகமதாபாத், சூரத் ஆகியவை குஜராத் நகரங்கள், புனே, சோலாப்பூர் ஆகியவை மகாராஷ்டிரா மாநில நகரங்கள், போபால், ஜபல்பூர் ஆகியவை மத்திய பிரதேச நகரங்கள். இம்மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பிஜு ஜனதா ஆளும் ஒடிசாவில், அம்மாநில தலைநகர், புவனேஸ்வர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழகம், கேரளா
தமிழகம் மற்றும் கேரளாவில் இவ்வாண்டு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. கர்நாடகாவில், அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் பாஜக பலம் பெற்று வருகிறது. ஆந்திராவில் ஏற்கனவே பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications