'சேப்டி பர்ஸ்ட்'!: மத்தியப் பிரதேசத்தில் தான் சுஷ்மா சுவராஜும் போட்டி!
டெல்லி: மத்தியப் பிரதேச முதல்வர் செளகான் தன்னைக் கைவிட மாட்டார் என்று நம்பும் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் அந்த மாநிலத்திலே தனக்கு சீட்டை கேட்டு வாங்கிக் கொண்டுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் விதிஷா தொகுதியில் போட்டியிடவுள்ளார். முன்னதாக அவர் போபால் தொகுதியில் போட்டியிடுவார் என்று பேச்சு அடிபட்டது. தற்போது அவருக்கு விதிஷாவை ஒதுக்கியுள்ளனர்.

விதிஷா தொகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. போபாலும் மத்தியப் பிரதேசம்தான். இந்த மாநிலத்தில் தான் தனக்கு சீட்டை எதிர்பார்க்கிறார் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மறைநத் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார். அதேபோல யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கும் பாஜக டிக்கெட் கொடுத்துள்ளது. இவர் ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாக்கில் போட்டியிடுவார்.
பூனம், மும்பை வட மேற்குத் தொகுதியில் போட்டியிடுவார். அங்கு காங்கிரஸ் சார்பில் பிரியா தத் போட்டியிடுகிறார் என்பது நினைவிருக்கலாம்.
லாலு பிரசாத் யாதவின் மகள் மிசாவுக்கு எதிராக முன்னாள் ராஷ்ரிடிய ஜனதாதள தலைவர் ராம் கிருபால் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். பாடலிபுத்ரா தொகுதியில் இவர் போட்டியிடுவார்.
முன்னாள் ராஜ்யசபா எம்.பி. எஸ்.எஸ். அலுவாலியா டார்ஜீலிங் தொகுதியில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications