பர்த்வான் குண்டுவெடிப்பு: அல் உம்மாவுடன் தொடர்புடைய வங்கதேச இஸ்லாமி சாத்ரா சிபிருக்கு தொடர்பு?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் வெடிகுண்டு தொழிற்சாலைகளை இயக்கத்தின் பின்னணியில் தமிழகத்தின் அல் உம்மா அமைப்புடன் தொடர்புடைய வங்கதேசத்தின் இஸ்லாமி சாத்ரா சிபிர் அமைப்பின் பங்கு இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கத்தின் பர்த்வான் பகுதியில் இம்மாதம் 2-ந் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டை மாநில போலீசார் சீல் வைத்துப் பூட்டினர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அந்த வீட்டை தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தியதில் ஏராளமான வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையே இயங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதில் முர்சிதாபாத்தில் மட்டும் 43 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டு தயாரிப்பு சம்பவங்களின் பின்னணியில் ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் என்ற அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த அமைப்பு இந்தியாவில் ஊடுருவுவதற்கு இஸ்லாமி சாத்ரா சிபிர் என்ற மாணவர் அமைப்புதான் உதவியிருக்கிறது. இந்த அமைப்பு பெண்களை தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு அனுப்பி வைக்கும் கொள்கை கொண்டது.
இதே இஸ்லாமி சாத்ரா அமைப்பினர் தமிழகத்தில் செயல்பட்ட அல் உம்மா இயக்கத்துடன் நேரடியாக தொடர்பும் வைத்திருந்தது. 2010ஆம் ஆண்டு முதல் இந்த வெடிகுண்டு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர்.
இந்த தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக 180 வங்கதேச நாட்டவர் ஊடுருவியிருக்கின்றனர். இவர்களுக்கு அனிசுர் என்ற உள்ளூர் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல் ஆயத்த ஆடை தொழிற்சாலையை நடத்தி வந்த சகீல் என்பவரும் இப்போது சிக்கியுள்ளார். அவரது தொழிற்சாலையில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் மதராசாக்கள்தான் இத்தகைய தீவிரவாத செயல்களில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications