அமைச்சர்கள் ஆர்டர் போட்டா அதிகாரிகள் எஸ் சார்னு வேலையை பார்க்கனும்..மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
நாக்பூர்: அமைச்சர்கள் ஆர்டர் போட்டால் எஸ் சார் என சொல்லிவிட்டு அதிகாரிகள் உடனே வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மகாராஷ்டிரா பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: அதிகாரிகளுக்கு எப்போதும் நான் ஒன்றைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறேன்... நீங்கள் சொல்கிறபடி எல்லாம் அரசாங்கம் செயல்பட்டுக் கொன்டிருக்க முடியாது.

அதிகாரிகளைப் பொறுத்தவரையில் எஸ் சார் என்பதை மட்டும்தான் சொல்ல வேண்டும். நாங்கள் அமைச்சர்கள் என்ன சொல்கிறோமே அதை செயல்படுத்துவதான் உங்களது வேலை. எங்களுடைய சொல்படிதான் அரசாங்கம் செயல்பட வேண்டும்.
மக்களுக்கான பணிகளை செய்வதற்கு சட்டங்கள் தடையாக இருக்கலாம்.. அப்படிப்பட்ட சட்டங்களை 10 முறை வேண்டுமானாலும் உடைக்கலாம்.வ சட்டங்களை உடைக்கக் கூடிய அதிகாரங்கள் அமைச்சர்களுக்கு உண்டு. அது தப்பே இல்லை. இதனைத்தான் மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார்.
1995-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் முதல்வராக மனோகர் ஜோஷி பதவி வகித்தார். அப்போது கட்ரிச்சோலி, மீல்காட் பகுதியில் சத்துணவுக் குறைபாடால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தனர். அப்பகுதியில் சாலைகளை சீரமைக்க வனத்துறை சட்டங்கள் தடையாக இருந்தன. அதனையும் மீறித்தான் நாம் சாலை உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்தினோம். ஆகையால் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்படிதான் கேட்க வேன்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications