5.66 கோடி ரூபாய் வருமானம்... மெகா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசுக்கு ரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் என்று கணிக்கப்பட்டுள்ள மெகா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் இன்று மத்திய கேபினட் அமைச்சர்களின் கூட்டம் நடைப்பெற்றது. இதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மெகா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 5.66 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, 2300 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் மூலம் சுமார் 64 ஆயிரம் கோடியும், தொலைத்தொடர்பு துறையின் பல்வேறு தீர்வை மற்றும் சேவைகள் மூலம் 98,995 ஆயிரம் கோடி ரூபாயும் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏலத்திற்கான முறையான அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 1-ம் தேதி ஏலம் தொடங்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2014 - 15ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் மத்திய அரசுக்கு 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. சீனாவிற்கு அடுத்தபடியாக மொபைல் போனின் சந்தையாக இந்தியா திகழ்கிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications