ஜனாதிபதி ஒப்புதல் அளித்தாலும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய முடியுமா?
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு, மத்திய சட்டத்துறை, கலாசாரத்துறை, வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அந்த அவசர சட்டம் உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பீட்டா போன்ற வழக்கின் எதிர்தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அவசர சட்டத்திற்கு தடை பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:
ஒரு அவசர சட்டம் அதிகபட்சம் 6 வாரங்களுக்கு செல்லுபடியாகும். அதற்குள் நாடாளுமன்றம் கூடினால் அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமானால், அதுகுறித்த தகவலை சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

வழக்கு தொடரலாம்
இப்படிப்பட்ட சூழல் ஆர்.சி.கூப்பர் vs இந்திய அரசு வழக்கில் 1970ல் ஒருமுறை நடந்தது. உடனடி தேவை இன்றி அவசர சட்டம் பிறப்பித்தாலோ, நாடாளுமன்ற விவாதத்தை தவிர்க்க திட்டமிட்டு பிறப்பிக்கப்பட்டாலோ அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கு
1982ல் ஏ.கே.ராய் vs மத்திய அரசு நடுவேயான வழக்கில், சில வழக்குகளில் முன்கூட்டியே கைது செய்யலாம் என்பது தொடர்பான அவசர சட்டம் ஆய்வு செய்யப்பட்டது. குடியரசு தலைவர் அங்கீகாரம் கொடுத்த சட்டமாக இருந்தாலும் கூட, சட்ட நெறிமுறைகளை தாண்டியிருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியது. ஆனால் வழக்கு அப்படியே முடித்து வைக்கப்பட்டது. காரணம், அதற்குள் நாடாளுமன்றம் மூலமாக அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

கேள்வி கேட்க முடியாது
அதிகாரம், அவசர சட்டத்தை பிறப்பிக்கும் குடியரசு தலைவர் மற்றும் கவர்னருக்கும் உள்ளது. எனவே, இதில் எதிர் கேள்வி கேட்க முடியாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

கேள்வி கேட்கலாம்
ஆனால், டி.சி.வட்வா மற்றும் பீகார் மாநில அரசுக்கு நடுவேயான ஒரு வழக்கில், 1987ல் சுப்ரீம்கோர்ட் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. அவசர சட்டங்களை வழக்கமாக்கினால், இது அவசர சட்ட ராஜ்ஜியம் ஆகிவிடும் என எச்சரித்தது சுப்ரீம் கோர்ட்.
இந்த அடிப்படையில், அரசியலமைப்பு சட்டத்தில் 38 மற்றும் 44வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தங்களையும் பார்ப்பது அவசியம்.
இந்த சட்ட திருத்தம்படி, குடியரசு தலைவர் திருப்தியுடன் வெளியாகும் அவசர சட்டமே இறுதியானது. இதை கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இந்த திருத்தம், 1978ம் ஆண்டில் அகற்றப்பட்டுவிட்டதால் இப்போது குடியரசு தலைவர் முடிவையும் கோர்ட்டில் கேள்வி கேட்க முடியும்.
ஜல்லிக்கட்டு அவசர சட்ட பிரச்சினையில், யாராவது அணுகினால் சுப்ரீம்கோர்ட் இதில் எந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி அதை அணுகும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications