வீட்டு வாடகை அதிகமா இருக்கே...ரொம்ப கஷ்டப்படுறேன்...: பிரியங்கா காந்தி
டெல்லி: கவுன்சிலர் ஆன உடனேயே கார், பங்களா என செட்டில் ஆகின்றனர் நம் ஊர் அரசியல்வாதிகள். ஆனால் மிகப்பெரிய தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மனைவியும், சோனியாகாந்தியின் மகளுமான பிரியங்கா, 53ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.
டெல்லியில் வசித்து வரும் வீட்டிற்கான வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதாகக் பிரியங்கா காந்தி கூறியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேரு பரம்பரையைச் சேர்ந்த பிரியங்கா காந்தி பலகோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர். ராபர்ட் வதேரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அவரும் தொழிலதிபர்தான்.
டெல்லியில் உள்ள மத்திய அரசின் 6ம் பிரிவு குடியிருப்புப் பகுதியில், பிரமாண்டமான வீட்டில் பிரியங்கா காந்தி வசித்துவருகிறார். சுமார் 2,765 ச.மீ பரப்பளவு கொண்ட இந்த வீட்டிற்கு, ரூ.53,421 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக பிரியங்கா காந்தி, ரூ.8,888 மட்டுமே செலுத்திவந்துள்ளார்.
இதுதொடர்பாக, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக, அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிரியங்கா, வீட்டு வாடகையை ரூ.8,888 ஆக குறைக்கும்படி வலியுறுத்தியிருந்தார். இதன்பேரில், பிரியங்காவுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது வாழ்க்கை வசதி மேம்பட்டுள்ளது. எனினும், அவர் ரூ.53,421 வாடகையை செலுத்தாமல், ரூ.31,300 மட்டுமே செலுத்துவதாக தெரியவந்துள்ளது.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். உண்மை இப்படியிருக்க, வீட்டு வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதாக, அவர் கூறிவருவது பலதரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, ''மிகப்பெரிய வீட்டில் ஒரு பகுதியில்தான் வசித்து வருகிறேன். இதர பகுதியில் பாதுகாப்புப் படையினர் வசிக்கின்றனர். நான் பயன்படுத்தும் பகுதிக்கு உண்டான வாடகையை மட்டுமே செலுத்தி வருகிறேன். எனினும், இந்த தொகை அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
சொந்த வீடு வாங்க முடியாத அளவிற்கோ, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவிற்கு அவ்வளவு ஏழையாகவா இருக்கிறார் பிரியங்கா காந்தி?.












Click it and Unblock the Notifications