காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக தொடங்கி வைத்த போராட்டம்- போர்க்களங்காகின மண்டியா, மைசூர்!
மண்டியா: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா, பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் இன்றும் தொடருகின்றன. மண்டியா போராட்டத்தில் ஒக்கலிகா கவுடா மடாதிபதி பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு மிக மிக குறைவாக வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு ஏற்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. தமிழ்நாடு அரசு, காவிரியில் 24,000 கன அடி நீரை கேட்டு தொடர்ந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து சொட்டு காவிரி நீரைத் தரவே கூடாது என முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது கர்நாடகா பாஜகதான். இதனைத் தொடர்ந்தே கன்னட விவசாயிகள் களத்தில் குதித்தனர். கர்நாடகா அரசியலுக்காக பாஜக பற்ற வைத்த நெருப்பு இன்று விவசாயிகளை வீதியில் இறக்கி விட்டுள்ளது.
மண்டியாவில் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவைத் தொடர்ந்து உக்கிரமாகி உள்ளனர். மண்டியாவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மண்டியா, மைசூர், பெங்களூர் நகரங்களில் பல்வேறு கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு கன்னட நடிகர், நடிகைகள் ஆதரவை தர தொடங்கி உள்ளனர்.
மண்டியா போராட்டத்தில் அப்பகுதியில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி பங்கேற்க உள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பெங்களூர் நகரத்துக்கு குடிநீர் வழங்கக் கூடிய நிலையத்தையும் பொதுப் பணித்துறை அலுவலகங்களையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் கொடும்பாவிகளை கொளுத்தியும் டயர்களையும் எரித்தும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துகின்றனர். பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை போராட்டங்களால் பதற்றமடைந்திருக்கிறது. கர்நாடக விவசாயிகளுடன் கன்னட ரக்ஷன வேதிகே போன்ற கன்னடர் இன அமைப்புகளும் இணைந்திருப்பதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளனர். இதனையடுத்து இரு மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications