மமதா vs சிபிஐ.. நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறது சிபிஐ.. மேற்கு வங்க ஆளுனரிடமும் முறையிட முடிவு!
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ இதுகுறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்து இருக்கிறது.
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ இதுகுறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்து இருக்கிறது.
சிபிஐக்கு மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிய பூதகரமாகி உள்ளது. தற்போது இது தேசிய பிரச்சனையாகவும், மாநில சுயாட்சி உரிமை பிரச்சனையாகவும் மாறியுள்ளது.

இன்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தற்போது சிபிஐ மாநில அரசின் அனுமதி இல்லாமல் கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா நடத்தி வருகிறார். அங்கு கொல்கத்தா திரிணாமுல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய சிபிஐ அமைப்பு இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு சிபிஐ செய்ய முடிவு செய்துள்ளது.
நாளை இதற்காக வழக்கு தொடுக்கப்படும் என்று சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் இது தொடர்பாக சிபிஐ மேற்கு வங்க ஆளுநரை சந்திக்கவும் சிபிஐ முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நாளை நேரமும் கேட்டு இருக்கிறது. நாளையே ஆளுநர் சிபிஐக்கு நேரம் வழங்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications