காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவும் முடிவு செய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தை முறைப்படுத்தும் திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
முறைப்படுத்தும் திட்டம் என்பது எதுவாக வேணாலும் இருக்கலாம். அதாவது மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம் அல்லது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு என எது வேணாலும் அமைக்கலாம் என்பதுதான் இதன் சாராம்சம்.

கெடு 29-இல் முடிவு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிடும்.

காவிரியில் இருந்து தண்ணீர்
இதுதொடர்பாக நீர் வளத் துறை அமைச்சகம் ஒரு வரைவை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. அதில் காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க கோரியுள்ளது. மேலும் காவிரி நீரை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பதை மேற்பார்வையிட ஒரு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதில் மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை எங்கும் இல்லை. இதை தவிர அரசுக்கு வேறு வழி இல்லை என்று கூறப்படுகிறது.

4 பேர் பகுதி நேரம்
எனவே காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்கவும் இதற்கு 9 பேரை உறுப்பினர்களாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த குழுவில் தலைவர் உள்பட 5 பேர் முழு நேர உறுப்பினர்களாகவும், மீதமுள்ள 4 பேர் 4 மாநிலங்களில் இருந்தும் பகுதி நேரமாக நியமிக்கப்படுவர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், காவிரி மேற்பார்வை ஆணையத்தை 29-ஆம் தேதிக்குள் அமைப்பது என்பது சாத்தியம் இல்லை. காலக்கெடுவுக்குள் மேற்பார்வை ஆணையத்தை அமைக்காவிட்டால் எதுவும் மாறிவிடாது என்கிறார்.

மார்ச் 31-ஆம் தேதி
ஒரு வேளை மார்ச் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 30-ஆம் தேதி புனிதவெள்ளி என்பதால் நீதிமன்றத்துக்கு விடுமுறை, எனவே மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடலாம் என தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications