மத்திய அரசு கட்டுப்படுத்த ஆந்திரம் ஒன்றும் தமிழகம் இல்லை... சந்திரபாபு நாயுடு கர்ஜிப்பு
மத்திய அரசு கட்டுப்படுத்துவதற்கு ஆந்திரம் ஒன்றும் தமிழகம் கிடையாது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Recommended Video

அமராவதி: தமிழகத்தை போல் ஆந்திரத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்தி விட முடியும் என நினைக்கிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி தேர்தலை சந்தித்து மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

இந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
அதுபோல் ஆந்திர அரசில் அங்கம் வகித்திருந்த பாஜகவினரும் மாநில அமைச்சரவையில் இருந்து விலகினர். இந்த நிலையில் பல்வேறு சமாதானப் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் நாயுடு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து ஆந்திர நலனுக்காக நேற்றைய தினம் இந்திராகாந்தி மைதானத்தில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். இதற்கு நீதிக்கான போராட்டம் என்று பெயரிட்டார். தெலுங்கு தேச கட்சி அமைச்சர்களும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதத்தை நடத்தினர்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது.
அதை எப்போதும் நடத்த விடமாட்டேன். மத்திய அரசுடனான இந்த போராட்டம் என் சுயநலம் அல்ல, மாநில நலத்துக்கானது என்றார் சந்திரபாபு நாயுடு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications