லடாக் பகுதியில் திபெத் தேசியக் கொடி ஏற்றம்... இந்தியா மீது சீனா குற்றச்சாட்டு
சீன எல்லையை ஒட்டிய இந்திய பகுதியில், திபெத் நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் தூண்டுதலே காரணம் என்று சீனா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: சீன எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதியில் திபெத் கொடியேற்றப்பட்டதற்கு இந்தியாவின் தூண்டுதலே காரணம் என்று சீனா குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் எல்லையில் இந்தியா - திபெத் - பூடான் இடையே எல்லை வரையறுக்கப்படாத பகுதியில், அண்மைக்காலமாக நடக்கும் சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் ராணுவ படைகளை லடாக் ஒட்டிய பகுதியில் படைகளை குவித்து வருவதால் போர்ப் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் சீன எல்லைக் கோட்டுப் பகுதி அருகே உள்ள பாங்கோங் ஏரிக் கரைப் பகுதியில் திபெத்தின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்திய அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே திபெத் பிரிவினைவாதிகள் தேசியக் கொடியை ஏற்றியதாக சீன பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன.
சிக்கிம் எல்லைப் பிரச்சினையில் இந்தியா திபெத்தை ஒரு கருவியாக பயன்படுத்த முயல்வதாகவும் சீன ஊடகங்கள் புகார் கூறியுள்ளன. ஏற்கெனவே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள இந்திய சீன எல்லைப்பகுதியில், இந்த விவகாரம் மேலும் சிக்கலைக் கூட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீருக்குள் சீன படைகள் நுழையும் என சீனா, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications