பாஜகவிற்கு சாதகமாகும் சூழ்நிலை.. கோவாவில் மெகா கூட்டணி அமைவதில் குழப்பம்.. எதிர்கட்சிகள் திணறல்
பனாஜி: கோவா சட்டசபைத் தேர்தலில் பெரிய அளவில் கூட்டணிகள் அமையாததால், பா.ஜ.க-வுக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பஞ்சாபை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இந்த நிலையில் கோவாவில் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

கோவா
கோவாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெல்ல வாய்ப்பிருப்பதாக டைம்ஸ் நவ்- வீட்டோ கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால் பாஜக-வில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நடந்து வருகிறது. கோவாவிலும் பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில் அம்மாநில தேர்தல் சூடுபிடித்துள்ளது.

பா.ஜ.க
பாஜக முதல்வர் பிரமோத் சவாந்திற்கு புதிய தலைவலியாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் கோவா முதல்வருமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால், கோவா தலைநகர் பனாஜி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவருக்கு பாஜக சீட் கொடுக்காவிட்டால், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கூட்டணி
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா இணைந்து மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரிய கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என மற்ற கட்சிகள் இதற்குத் தயாராகி வந்தன. ஆனால் இதுவரை இதில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் விடுத்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

வெற்றி வாய்ப்பு
ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. எனவே அங்கு கூட்டணி எதுவும் பெரிதாக முடிவாகவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உரிய கூட்டணி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறது. இதனால் பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திரிணாமுல்
திரிணாமுல் காங்கிரஸ், ஒரு மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருக்கிறது. அதனால், திரிணாமுல் கட்சியின் கூட்டணி அழைப்பை நிராகரித்துள்ளது. இதனால் பாஜக-வின் வெற்றி எளிதாகிவிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications