"பிள்ளை பிடிக்கும்" பாஜகவிடமிருந்து எம்எல்ஏக்களை காக்க... கூவத்தூர் பார்முலாவுக்கு தாவும் காங்.!
கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றவுடன் ஈகிள்டன் ரிசார்ட்டில் அவர்களை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றவுடன் பாஜகவின் வலையில் சிக்காமல் இருக்க ஈகிள்டன் ரிசார்ட்டில் அவர்களை தங்க வைக்க பேருந்தில் அனுப்பப்பட்டுள்ளனர்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டது.
எனினும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் கழுகு போல் கொத்திக் கொள்ள பாஜக காத்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ
கர்நாடகத்தில் பாஜக தனிபெரும்பான்மைமை நிரூபிக்க அக்கட்சி 4 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை பிடித்து ஆட்சியை பிடிக்க பாஜக எத்தகைய எல்லைக்கும் போகும் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி குஷ்டகி எம்எல்ஏ (காங்) அமரேகௌடா லிங்கனா கௌடா பய்யாபூரை பாஜகவினர் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தைகளை காட்டி வருவதாக அவரே தெரிவித்தார்.

பாதுகாப்பு
பாஜகவை பற்றி முழுமையாக தெரிந்த காங்கிரஸ் கட்சி அதன் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள திட்டமிட்டது. அதன்படி எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன் அவர்களை அப்படியே சொகுசு பேருந்தில் ஏற்றி ஈகிள்டன் ரிசார்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் பார்முலா
ஜெயலலிதா மறைந்தவுடன் ஓபிஎஸ் மற்றும் திமுகவிடம் இருந்து தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள கூவத்தூரில் சசிகலா தரப்பு சிறை வைத்தது. அந்த பார்முலாவை காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களவை தேர்தலின்போது அமித்ஷா- அகமது பட்டேல் இடையே போட்டி நிலவியபோது செய்தது.

பொறுப்பை ஏற்கிறார்
குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவின் புள்ளைபுடிப்பதில் இருந்து காத்து பத்திரப்படுத்தும் பொறுப்பு மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்த முறையும் கர்நாடக எம்எல்ஏக்களை ஈகிள்டன் ரிசார்டில் வைத்து பாதுகாக்கும் பணியை இவரே ஏற்பார் என்று தெரிகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications