காங்கிரசின் 50% சதவீத வேட்பாளர்கள் 35 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும்-ப.சி
டெல்லி: இந்த நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல மக்கள் காங்கிரஸுக்கே மீண்டும் உரிமை தருவார்கள், உத்தரவிடுவார்கள். எனக்கு அதில் பரிபூரண நம்பிககை உள்ளது. எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டமிடலை காங்கிரஸ் இன்றே தொடங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், 10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் கூடி நமது வெற்றியைக் கொண்டாடியதை அனைவரும் சற்று திரும்பிப் பாருங்கள். அன்று நாம் எதிர்காலம் குறித்த திட்டங்களையும் தீட்டினோம்.
அதேபோல அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்களை நாம் தீட்ட தொடங்கலாம். அதற்கான கூட்டமாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். ஆம், அபரிமிதமான நம்பிக்கையுடன் நான் கூறுகிறேன், மீண்டும் காங்கிரஸிடமே நாட்டைத் தலைமை தாங்கும் உத்தரவை மக்கள் வரும் தேர்தலில் தரப் போகிறார்கள். அதை நான் பரிபூரணமாக நம்புகிறேன்.

நாம் ஏழ்மையை வெல்ல வேண்டும், கல்லாமையை வெல்ல வேண்டும், பசி பட்டினியை வெல்ல வேண்டும்.
நாட்டில் பல கட்சிகள் வந்து போய்விட்டன.. கல் மாதிரி நிற்பது காங்கிரஸ் மட்டுமே. சிறுபான்மையினர் நலன், சமூக நீதியை நிலைநாட்டியது காங்கிரஸ் மட்டுமே. இந்தியாவின் சரித்திரம் காங்கிரசுடன் பின்னிப் பிணைந்தது.
சுதந்திரமான, ஜனநாயக இந்தியாவை கட்டியெழுப்புவதே நமது நோக்கமாகும். நாம் வளர்வது மட்டும் முக்கியமல்ல, மாறாக இந்த வளர்ச்சியானது உள்ளடங்கிய வளர்ச்சிக்கும் வி்த்திடுவது அவசியம்.
நமது நோக்கம், இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சமூ்க நீதியைப் பெற வேண்டும்.
5-10 வருடங்களில் நமது பணிகள் முடிய வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. மாறாக வாழ்நாள் முழுவதும் இ்ந்த நாட்டுக்காக உழைக்க வேண்டும். அதுதான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டை ஆண்ட எந்த அரசாவது இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ளதா என்று இதற்கு முன்பு ஆண்டவர்களிடம் போய்க் கேளுங்கள். எந்த ஒரு அரசும் இப்படிப்பட்ட சாதனை வளர்ச்சியை நமது நாட்டில் இதுவரை பதிவு செய்ததே இல்லை. இதுதான் உண்மையான வளர்ச்சி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் 50% சதவீத வேட்பாளர்கள் 35 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?












Click it and Unblock the Notifications