7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற காமுகன்... போலீஸ் முன் கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்!!
ஹைதராபாத்: ஆந்திராவில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற காமுகனை கிராம மக்கள் துடைப்பத்தால் அடித்தும் கல்லால் தாக்கியும் கொன்றனர். போலீசார் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 7 வயது மகள் கடந்த 16ந் தேதி மாயமானார். இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்த வாலிபர் சுரேஷ் என்பவன் கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சுரேசின் வீட்டில் இருந்த இருப்பு டிரங் பெட்டியில் சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசை தேடி வந்தனர். இதற்காக 6 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சுரேஷ் தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்ததும் போலீசாரும் அங்கு வந்து சுரேசை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் விடாமல் விரட்டினர்.
ஏலூர் ரயில்வே மேம்பாலத்தில் ஓடிய சுரேஷ் திடீரென்று பாலத்தில் இருந்து கீழே குதித்தான். இதில் அவன் காயமடைந்தான். அவனை மீட்க போலீசார் முயன்றனர். ஆனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்களால் சுரேசை தாக்கினர்.
போலீசார் அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ஆவேசம் அடங்காத பொதுமக்கள் போலீசார் முன்னிலையிலேயே சுரேசை அடித்து உதைத்தனர். இதில் சுரேஷ் உயிரிழந்தான். போலீசாரின் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் ஆந்திர முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications