குளிரில் "காயும்" டெல்லிவாசிகள்- இன்று மட்டும் 30 விமானங்கள் "லேட்"!
டெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக 30 விமானங்கள் தரை இறங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
வடமாநிலங்களில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டி வதைத்தது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வட மாநிலங்களில் பனி மூட்டம் அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று அதிகாலை பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
பனிப்பொழிவு அதிகம்:
11 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்ப சூழ்நிலையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. 10 மீட்டருக்குள் வருபவர்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு பனி இருந்தது.
தாமதமாகிய சேவைகள்:
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இன்று அதிகாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் தாமதமாக தொடங்கின.
ஊர்ந்து சென்ற வாகனங்கள்:
பஸ் மற்றும் கார்கள் விளக்கு வெளிச்சத்தில் மெல்ல சென்றன. விமான நிலையப் பகுதியிலும் அதிக பனிப்பொழிவு இருந்ததால் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
விமானங்கள் தாமதம்:
23 உள்நாட்டு விமானங்கள், 7 சர்வதேச விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவித்தன. அந்த விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காலை 7 மணிக்கு பிறகே வெளிச்சம் வந்தது. அதன் பிறகு 30 விமானங்களும் தாமதமாக டெல்லி வந்தடைந்தன.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
முடங்கிய துபாய்.. பிளான் Bஐ கையில் எடுக்கும் இந்திய விமான நிறுவனங்கள்.. நிலைமையை சமாளிக்க முடியுமா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications