ஒடிஷா வங்கியில் ரூ1 கோடி செல்லாத நோட்டுகள் கொள்ளை- மர்ம நபர்கள் துணிகரம்!
ஒடிசா மாநில வங்கியிலிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புவனேஸ்வர்: 500 , 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகளை ஒடிசாவில் உள்ள ஒரு வங்கியிலிருந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண அன்றாடம் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தினால் எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த களபேரத்துக்கு இடையே செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை கொள்ளை அடிக்கும் சம்வங்களும் அரங்கேறி வருகின்றன. வங்கி ஊழியர்கள் சிலரின் ஆதரவுடன் பல்வேறு முறைகேடுகளும் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளன.
இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் ஒடிசா மாநிலத்திலும் நடந்துள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
அந்த மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில், ஒடிசா கிராமிய வங்கியின் கிளை உள்ளது.அந்த வங்கியில் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு பெரிய பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன; அவற்றின் மொத்த மதிப்பு, 8 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் திங்கள்கிழமை காலை வங்கியை திறந்த அதிகாரிகள், அந்த பெட்டி, உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். மேலும்,அந்த பெட்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த, 1.15 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள், போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது, 'வங்கியில் ஊழியர்களின் உதவி இல்லாமல், இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை' என தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications