'லக்கி'யும் இல்லை, 'அன் லக்கி'யும் இல்லை பங்கஜ்... அட்வைஸ் கொடுத்த டோணி!
டெல்லி: டோணி புகழ் பாடும் வீரர்கள் வரிசையில் கிரிக்கெட் வீரர் பங்கஜ் சிங்கும் சேர்ந்துள்ளார். தனக்கு டோணி நிறைய அறிவுரைகளை வழங்கியுள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் பங்கஜ் சிங்.
பங்கஜ் ஒரு வேகப் பந்து வீச்சாளர். ஆனால், இந்தியா கண்ட வரலாறு காணாத சூப்பர் பந்து வீச்சாளர் என்று நிச்சயமாக பங்கஜ் சிங்கை கூற முடியாது. ஆனால் இந்த வீரரின் கமிட்மென்ட்டை யாரும் குறை கூறவே முடியாது.
இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், செளதாம்ப்டனில் நடந்த போட்டியின்போது அறிமுகமானவர். தனது முதல் போட்டியில் வியர்க்க விறுவிறுக்க பந்து வீசியும் கூட ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அந்த வகையில் பிரபலமானவர் பங்கஜ் சிங்.
அந்த டூரின்போது டோணி தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து இப்போது மனம் திறந்துள்ளார் பங்கஜ் சிங். அதிலிருந்து சில....

பரிதாபமாக பார்த்த மக்கள் மத்தியில்
நான் எனது முதல் போட்டியில் அவ்வளவு ஓவர்கள் வீசியும் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால் எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஆனால் டோணி அதை வேறு மாதிரியாகப் பார்த்தார்.

நேர்மைதான் முக்கியம்
நாம் நமது முயற்சிகளில் நேர்மையாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். எனக்கு உனது நேர்மையில் எந்த சந்தேகமும் இல்லை. குறையும் காணவில்லை என்றார் டோணி என்றார் சிங்.

179 ரன்கள்கள் கொடுத்து
தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கஜ் சிங் 179 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

ரொம்பக் கஷ்டம் பாஸ்
சிங் மேலும் கூறுகையில், அது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இத்தனைக்கும் நான் நூறு சதவீத அர்ப்பணிப்புடன் பந்து வீசினேன். அந்த பந்து வீச்சுக்கு ஏற்றார் போல விக்கெட் கிடைக்கவில்லை.

2வது போட்டியில் விக்கெட் கிடைத்தாலும் கூட
2வது போட்டியில் நான் 2 விக்கெட்களை வீழ்த்தினேன். ஆனால் அது கூட கடைசி வரிசை வீரர்களின் விக்கெட்தான். எனவே அதுவும் எனக்கு திருப்தி தரவில்லை.

ஆஸி டூரில் இடம் கிடைத்தால்
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் எனக்கு இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை சரியாக பயன்படுத்துவது என்பதி்ல நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்றார் சிங்.
தற்போது பங்கஜ் சிங் துலீப் டிராபி போட்டியில் விளையாடி வருகிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications