சம்பவத்திற்குப் பின் வீட்டை விட்டே வெளியேறவில்லை: உபேர் டிரைவரால் சீரழிக்கப்பட்ட பெண் கண்ணீர்
மெயின்புரி: டெல்லியில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உபேர் கால்டாக்ஸி டிரைவர் ஷிவ்குமார் யாதவ், கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறையில் இருந்தவன். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவன், மீண்டும் பணியில் சேர்ந்து தனது கொடூர புத்தியை வெளிப்படுத்தியுள்ளான்.
அவன் கைது செய்யப்பட்டதை மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராம் நகரைச் சேர்ந்தவர் மக்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால் அவனால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், இன்றைக்கும் அந்த சம்பவத்தை அச்சத்துடன் விவரிக்கிறார்.

ஷிவ்குமார் யாதவ்வின் பக்கத்து ஊரைச் சேர்ந்த 32 வயதான அந்த பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பலாத்காரம் செய்யப்பட்டார். "பலாத்கார முயற்சியின் போது கத்தி கூச்சலிட்டேன். ஆனால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்தான். அவனது சட்டையை பிடித்து உலுக்கினேன். ஆனால் அவன் என்னை பலவந்தமாக அடித்து உதைத்து கீழே தள்ளினான் என்றும் பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்குப்பின்னர் நான் வீட்டை விட்டே நீண்ட நாட்கள் வெளியே வரவேயில்லை என்கிறார்.
பலாத்கார சம்பவத்தில் யாதவ் கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். 2011ஆம் ஆண்டு குர்கானில் பணியில் சேர்ந்த போது அங்கும் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் சிறைதண்டனை பெற்றுள்ளான்.
2013ஆம் ஆண்டு பலாத்கார வழக்கிலும், கொள்ளை வழக்கிலும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவன். ஷிவ்குமார் யாதவ் கிராமத்திற்கு சென்றாலே கிராம பெண்கள் தங்களின் மகள்களை வீட்டுக்கதவை பூட்டிக்கொள்ளச் சொல்வார்களாம். பெண்களை கண்டாலே அவர்களின் உடைகளை இழுத்து சில்மிஷம் செய்வானாம். அதனாலேயே அவனைக் கண்டு அஞ்சியுள்ளனர் கிராம பெண்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications