டி.என்.ஏ விவர சேகரிப்பு சட்டம் என்றால் என்ன?, மக்களின் மர்ம உறுப்புகளை போட்டோ எடுப்பார்களா?
டெல்லி: மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகர் டி.எஸ்.ராவ் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்ட மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனி மனிதரின் அந்தரங்கங்களை அங்குலம், அங்குலமாக அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இந்த மசோதா என்பதே சர்ச்சைக்கு காரணம்.

டி.என்.ஏ சட்டம்
இப்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள சட்ட மசோதாக்களில் மக்களின் மரபணு (DNA) விவர சேகரிப்பு சட்ட முன்வரைவும் ஒன்றாகும். தேசிய அளவில் மக்களின் 'மரபணு விவரத் தொகுப்பு' (database) ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்த மசோதா சொல்கிறது.

மரபணு சேமிக்கப்படும்
இந்த விவரங்களின் உதவியுடன் குற்றச் செயல்களையும், சிவில் பிரச்னைகளையும் தீர்க்கலாம் என்று இந்தச் சட்ட முன்வரைவு பரிந்துரைக்கிறது. தன்னார்வலர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் மரபணு மாதிரிகளை கொடுக்கமுடியும். ரத்த வங்கி போலத்தான் இதுவும்.

அந்தரங்க உறுப்புகள்
இந்தச் சட்ட மசோதா, மக்களின் பிறப்பு உறுப்புகள், பின்பக்கம், பெண்களின் மார்பகங்களிலிருந்து மரபணு விவரங்களைச் சேகரிப்பதை கட்டாயமாக்குகிறது. எனவே, தனிமனித அந்தரங்கத்தில் இச்சட்டம் தலையிடுவதாக புகார் எழுந்துள்ளது.

படம், வீடியோ
இந்த மசோதாவில் கூறப்படும் தடயவியல் முறை, பிறப்பு உறுப்புகளைப் பரிசோதிப்பதையும் பிறப்பு உறுப்புகளிலுள்ள பாகங்களை படம் எடுப்பதையும் வீடியோ பதிவு செய்வதையும் அனுமதிக்கிறது. இது மிகவும் பத்திரமாக வைக்கப்படும் என்றாலும்கூட, பெண்களுக்கு இதில் சங்கோஜம் ஏற்படலாம்.

குற்றவாளிகளுக்கு ஆப்பு
அதேநேரம், இந்த மசோதாவால் மிகப்பெரிய நன்மை விளையும் என்பதை மறுக்க முடியாது. குற்றம் நடைபெற்ற இடங்களில் கைப்பற்றப்படும் ஆதாரங்களில் பதிவாகியுள்ள மரபணு படிமத்தைக் கொண்டு, அது யாருடைய மரபணு என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதனால், தீவிரவாதம், கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற முக்கிய வழக்குகளை குற்றவாளிகளை பிடிப்பது எளிதாகிவிடும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications