கிரேஹாம் பெல்தான் போன் கண்டுபிடிச்சது.. அதை யூஸ் பண்ணுங்க.. டிஜிட்டல் இந்தியாவை கலாய்த்த நீதிபதிகள்
வழக்குகளில் தாமதம் ஏற்படுவது குறித்து வித்தியாசமான கருத்து ஒன்றை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Recommended Video

டெல்லி: இந்தியாவில் தற்போது டிஜிட்டலைசேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் இப்போதுதான் டிஜிட்டல் இந்தியா கோஷம் ஓங்கி ஒலிக்கிறது.
ஆனாலும் இன்னும் அரசு அலுவலங்களில் மெயிலுக்கு பதில் போஸ்ட்தான் அனுப்பப்பட்டு வருகிறது. போன் காலுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது .
இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெவ்வேறு வழக்குகளில் கடந்த இரண்டு நாட்களில் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதுதான் உங்கள் டிஜிட்டலைசேஷனா என்று கேட்டுள்ளார்கள்.

கால அவகாசம்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஜார்கண்ட் சார்பாக வழக்கறிஞர் தாபேஷ் குமார் சிங் வாதாடினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட சில முக்கிய விவரங்கள் அவரிடம் இல்லை என்பதால் அரசிடம் கேட்டு இரண்டு வாரம் கழித்து கொடுக்கிறேன் என்று கூறினார். நீதிபதிகள் செல்லமேஸ்வரர், சஞ்சய் கே கே கவுல் இதற்கு அனுமதி அளித்தார்கள்.

எவ்வளவு
ஆனால் அவர் இரண்டு வாரம் கழித்து நேற்றும் தகவல்களை சமர்ப்பிக்கவில்லை. மேலும் மாநில அரசு அலுவலகம் சென்று பேச நேரம் ஆகும் என்றும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள் இன்னும் எவ்வளவு அவகாசம் வேண்டும். 5 வருடம் போதுமா என்றார். உடனே மற்றொரு நீதிபதி இல்லை ஐந்து வருடம் போதாது 10 வருடம் கொடுக்கலாம் என்று கிண்டல் செய்தார்.

போன்
அதோடு இல்லாமல் ''19ம் நூற்றாண்டில் கிரேஹாம் பெல் என்பவர் வாழ்ந்தார். அவர் தொலைபேசி என்ற ஒன்றை கண்டுபிடித்தார். நாம் இப்போது அதைப் பயன்படுத்துகிறோம். அதை வைத்து நீங்கள் அரசு அதிகாரிகளிடம் பேசி தகவலை பெறலாமே'' என்று கிண்டலாக கேட்டார்கள்.

மெயில் இருக்கு
இதேபோல் இரண்டு நாள் முன்பு ஒரு வழக்கில் மத்திய அரசு நீதிமன்றத்திடம் சரியான ஆவணங்கள் கொடுக்கவில்லை என்று நீதிபதிகள் மதன் லோகர், தீபக் குப்தா ஆகியோர் கோபப்பட்டனர். அப்போது ''இப்படி ஆவணங்களை ஏன் எப்போது போஸ்டில் அனுப்புகிறீர்கள். எல்லாம் டிஜிட்டலை மயம் என்று சொல்கிறீர்கள், ஏன் மெயில் அனுப்பத் தெரியாதா?'' என்று கேட்டு இருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications