அப்பாடா... இனிமேல் மருந்துச் சீட்டில் புரிவது போல எழுதப் போகிறார்கள் டாக்டர்கள்!
டெல்லி: டாக்டர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டுக்களில் இனிமேல் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதித் தரும் வகையில் சட்டம் போடப் போகிறார்களாம்.
பிரிஸ்கிரிப்ஷன் எனப்படும் மருந்துச் சீட்டுக்களில்தற்போது டாக்டர்களின் கையெழுத்து சாதாரணமானவர்களுக்குப் பெரும்பாலும் புரிவதில்லை. அதற்கு நோயாளிகள்,தங்களது இஷ்டத்திற்கு மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகவும், இதுபோன்ற பாதுகாப்புகாரணத்திற்காகவுமே இப்படி எழுதுகிறார்கள் டாக்டர்கள் என்ற கருத்து உள்ளது.
அதேசமயம், சிலநேரங்களில் மருந்துக் கடைகளிலே கூட டாக்டர்கள் எழுதித் தரும் சீட்டுகள் புரியாமல் போய் விடும் நிலையும் ஏற்படுகிறது.
இதையடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் பெரிய எழுத்துக்களில் டாக்டர்கள் எழுதித்தரும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்த வந்தன.
இதன்படிதற்போது ஒரு வரைவுநகலைமத்திய அரசுதயாரித்துள்ளது.அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்து விட்டது. தற்போது, இந்த அறிவிக்கை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சகம் அனுமதி அளித்தால், மருந்து சீட்டுகளை பெரிய எழுத்துகளில் எழுதும் சட்டம் நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும்.
ஆனால் இப்படி பெரிய பெரிய எழுத்துக்களில் உட்கார்ந்து நிதானமாக எழுதினால் நோயாளிகளை அதிக அளவில் பார்க்க முடியாது, தேவையில்லாத தாமதம் ஏற்படும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications