நாடு முழுவதும் ரூ.80 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
டெல்லி: நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 80 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், இந்த தொகை சிக்கியுள்ளது.
தேர்தலில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் , வருமானவரித்துறை, கலால் வரித்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்களை செலவு கணக்கு பார்வையாளர்களாக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதைத் தவிர கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்தையும், நிதி புலனாய்வு பிரிவையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 80 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், மிகப் பெரிய அளவாக 49 கோடியே 85 லட்சம் ரூபாய் ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக தமிழகத்தில் 11 கோடியே 32 லட்சம் ரூபாயும், மூன்றாவதாக உத்திர பிரதேசத்தில் 9 கோடியே 30 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 659 அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பணம் பறிமுதல் குறித்து அனைத்து நாட்களிலும் தகவல் பெறலாம் கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications