ஐ.பி.எல் சூதாட்டம்: நாடுமுழுவதும் அமலாக்கத்துறை இயக்குநரகம் ரெய்டு
மும்பை: ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, நாக்பூர், மற்றும் போபால் உள்ளிட்ட 10 நகரங்களிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பெட்டிங் சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளின் நிர்வாகிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா இருவரும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆயுள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி லோதா தலைமையிலான குழு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை இயக்குநரகம் ரெய்டுகளை நடத்தியுள்ளது. இருப்பினும் தற்போது புதிதாக கிடைத்த தகவல்களின் அடிப்டையில் நேற்றைய ரெய்டுகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தில் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் நேற்றைய ரெய்டு நடந்துள்ளது. சமீபத்தில் குஜராத் மாநிலம் வதோதராவில் ஒரு பண்ணை இல்லத்தில் வைத்து சில புக்கிகள் பிடிபட்டனர். மார்ச் 19ம் தேதி இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கிரண் மாலா, டோமி படேல் ஆகியோர் முக்கியமானவர்கள். டோமி படேல் உஞ்சா நகராட்சியின் கவுன்சிலர் ஆவார்.
ஐ.பி.எல் பெட்டிங் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பண மோசடி மற்றும் சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ. 4000 கோடி அளவுக்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 418, 419, 420, 467, 471, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த 6வது சீசன் போட்டியில், சில வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த், அன்கித் சவான், அஷோக் சாண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications