ரூ.350 கோடி பறிபோனதால் தற்கொலை செய்து கொண்ட எம்எல்ஏ- மர்மம் விலகியது
லக்னௌ: உத்தரப்பிரதேசம் மாநில ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. 350 கோடி ரூபாயை பறிகொடுத்த அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., அனார் சிங் திவாகர். இவர் கோட்வாலி என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் ஞாயிறன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது மர்மமாக இருந்தது.

இந்நிலையில், அவரது சடலம் கைப்பற்றப்பட்ட ஓட்டல் அறையில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் திவாகர் எழுதிய ஒரு கடிதம் ஆகியவற்றை போலீசார் திங்கட்கிழமை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தை திவாகர் எழுதியுள்ளார்.டெல்லியை சேர்ந்த 5 பேர் தன்னிடமிருந்து 350 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதால் இந்த விபரீத முடிவை தேர்ந்தெடுக்க நேர்ந்தது என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, திவாகர் மரணத்திற்கான மர்மம் விலகியுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜலேசர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட திவாகர் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனையடுத்து, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஹத்ராஸ் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார்.
சமீபத்தில், சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் திவாகர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications