பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள்- தணிக்கை அதிகாரியாக '2ஜி' வினோத் ராய் நியமனம்
டெல்லி: திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயில் சொத்துகளை தணிக்கை செய்ய முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராயை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்த வினோத் ராய் தான் 2ஜி விவகாரத்தில் ரூ. 1.6 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறியவர் என்பதும், ஆனால், சிபிஐ ரூ. 3,000 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் கோயில் நிலவரம் குறித்து ஆய்வு செய்து கடந்த 15ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், பத்மநாப சுவாமி கோயில் சொத்துகளை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலை அளிக்கின்றன. இது குறித்து தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. உத்தரவு விவரம்:
திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிப்பார்கள். அந்தக் குழுவில் பத்மநாப சுவாமி கோயிலின் தலைமை பூசாரி, தந்திரி, 2 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஒருவர் கேரள அரசிடம் ஆலோசனை நடத்திய பிறகு நியமிக்கப்படுவார்.
கோயில் சொத்துகளையும், கணக்குகளையும் முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தணிக்கை செய்வார்.
பத்மநாபசுவாமி கோயிலின் முன்னாள் நிர்வாகி ஒருவரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் கோயிலின் செயல் அதிகாரிகளாக இருப்பார்கள்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications