மீண்டும் போராட்டத்தை துவங்கிய தமிழக விவசாயிகள்.. இரும்பு சங்கிலியால் கை,கால்களை கட்டி நூதன போராட்டம்
தமிழக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் தங்களது நூதனப் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நேற்று, இரும்பு சங்கிலியால் கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சுமார் 41 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். எனினும் வாக்களித்தபடி முதல்வரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், டெல்லியில் மீண்டும் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று முன்தினம் திடீரென பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து விவசாயிகளை போலீசார் தடுத்து, கைது செய்து நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து 2வது நாளான நேற்று காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் துவக்கினார்கள். விவசாயிகள் அனைவரும் கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் கட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் உணர்வு களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களை நான்காம் தர மக்களை போல் நடத்தி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனை அளிக்கின்றது. மேலும் டெல்லி போலீசார் தமிழக விவசாயிகளை இங்கு போராட்டம் நடத்த வேண்டாம் எனக்கூறி தமிழகம் திரும்ப வற்புறுத்தி வருகின்றனர்.
Recommended Video


அதனால் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும், விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் அனைவரும் கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் கட்டி பூட்டு போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications