கோரிக்கைகள் நிறைவேற வீர மரணடையவும் தயார்... அய்யாகண்ணு திட்டவட்டம்
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக நாங்கள் வீர மரணம் அடையவும் தயாராக உள்ளோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
டெல்லி: கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் விவசாயிகள் தயாராக உள்ளோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டம் இன்று 28-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போராட்டக் களத்துக்கு வந்த டெல்லி போலீஸார் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

10 அனுமதி
இதைத் தொடர்ந்து அய்யாகண்ணு தலைமையில் 10 விவசாயிகள் ஜீப்பில் ஏறினர். பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களில் அய்யாகண்ணுவை மட்டும் பிரதமர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். அங்கு உள்ளே சென்றதும் அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.இதைக் கண்டித்து முழு நிர்வாண போராட்டம் மேற்கொண்ட 7 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

அய்யாகண்ணு புகார்
பிரதமரை சந்திக்க அழைத்து செல்வதாக கூறிவிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதிலேயே போலீஸார் குறியாக உள்ளதாக அய்யாகண்ணு குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பிரதமரை சந்திப்பதாக அழைத்து சென்று எங்களை மத்திய அரசு நிர்வாணமாக்கி விட்டது.

வீரமரணம் அடைய தயார்
கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் விவசாயிகள் தயாராக உள்ளோம். எங்கள் மானம் போய்விட்டது, பிரதமர் சந்திக்கவில்லை, எங்கள் உயிர் போனால் தான் எங்களை சந்திப்பார் என்றால் அதற்கும் நாங்கள் தயார். எங்களது போராட்டத்தை பிரதமர் மோடி கேட்காதது ஏன்? நாங்கள் தீண்டத்தகாதவர்களா? இந்தியாவை விவசாய நாடு என்று இதற்கு மேல் சொல்ல முடியுமா?

உலக நாடுகள் முன்பு
விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிடுவது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு அவமானம் இல்லையா ? பிரதமர் அழைத்து பேசாததால் நிர்வாணமாக போராட்டம் நடத்தினோம். விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்க பார்க்கிறதா மத்திய அரசு. கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை. இதன் பிறகாவது எங்களை பிரதமர் சந்திக்க வேண்டும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications