எல்லை தாண்டும் மீனவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.. இலங்கை பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்
ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியா வந்தார். மாலை 5 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, திருகோணமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது, எல்லை தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படை கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
எந்த சூழ்நிலையிலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை தாக்கக் கூடாது என்றும் மோடிக் கேட்டுக் கொண்டார். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து சிறைப்படுத்துவதாக புகார்கள் வரும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு ரணிலிடம் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications