கால்பந்தாட்டம் பார்க்க பிரேசில் போன கல்லூரி மாணவன்.. கம்பி எண்ணுவதோ திகார் சிறையில்..
டெல்லி: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை பார்க்க பிரேசில் சென்ற இந்திய கல்லூரி மாணவன் இப்போது திகார் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார். காரணம், போலி விசா மோசடி பேர்வழியிடம் ஏமாந்ததுதான்.
சண்டிகரை சேர்ந்தவர் அமித்பால் சிங். கல்லூரி பட்டப்படிப்பு ,இறுதியாண்டு தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட் எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர். அதே நேரம், குடும்பம் வசதியானது என்பதால், இவருக்கு சொந்தமான சண்டீகரில் ஹோட்டல், பிளாட் வீடுகள் உள்ளனவாம்.

அமித்பால்சிங்கிற்கு கால்பந்தாட்டம் என்றால் உயிர். பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்தாட்டத்தை நேரில் சென்று ரசிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே, பணம் சேர்த்து வைத்துள்ளார்.
பிரேசில் நாட்டு விசாவுக்காக மும்பையை சேர்ந்த டிராவல் ஏஜெண்ட் ஒருவரை அமித்பால்சிங் அணுகியுள்ளார். அந்த ஏஜெண்ட் விசா வாங்கித்தர ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். பேரத்துக்கு பிறகு இறுதியாக, ரூ.5 லட்சம் தருவதற்கு அமித்பால் சம்மதித்தார்.
பணத்தை வாங்கிய ஏஜெண்ட் 'விசாவை' அமித்பால்சிங்கிடம் கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிரேசில் சென்றிருந்த அமித்பாலுக்கு அந்த நாட்டு ஏர்போர்ட்டிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
விசாவை பரிசோதித்து பார்த்த குடியுரிமை அதிகாரிகள், அமித்பாலிடம் இருப்பது போலி விசா என்று கூறி உடனடியாக இந்தியாவுக்கு திருப்பியனுப்பினர். தகவல் கிடைக்கப்பெற்றதும், டெல்லி ஏர்போர்ட்டில் வந்திறங்கிய அமித்பால்சிங்கை போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளளனர்.
டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து அமித்பால்சிங் கிளம்பும்போது, போலி விசாவை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொள்ளாமல்விட்டது எப்படி என்பது பற்றியும் இப்போது விசாரணை தொடங்கியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications