நடிகை பலாத்கார வழக்கில் மத்திய அமைச்சர் கவுடா மகன் சமரச மையத்தை அணுகலாம்: கோர்ட் அறிவுரை
நடிகை பலாத்கார விவகாரம் தொடர்பாக இணக்கமான தீர்வு காண சமரச மையத்தை அணுகுமாறு கார்திக் கவுடாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூர்: பாலியல் பலாத்கார வழக்கில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா சமரச மையத்தை அணுகி தீர்வு காணுமாறு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட நடிகை மைத்ரியா கவுடா மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தன்னை ரகசிய திருமணம் செய்து வேறு பெண்ணை மணக்க உள்ளார் என்று கூறி பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் பலாத்காரம், ஏமாற்றம், கடத்தல் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார், நீதிமன்றத்தில் கார்த்திக் கவுடா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக் கவுடா மற்றும் நடிகை மைத்ரியா தரப்பு இணக்கமான தீர்வு காண சமரச மையத்தை அணுகுமாறு பெங்களூர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் வழங்குமாறு கார்த்திக் கவுடாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும் குஷால்நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் நானய்யாவின் மகள் ராஜ்ஸ்ரீ என்கிற ஸ்வாதிக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இதனிடையே கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து வேறு பெண்ணை மணக்க உள்ளதாக கூறி நடிகை மைத்ரி கவுடா ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications