ப.சிதம்பரம் சார் ரொம்ப கதறாதீங்க... கோவா தேர்தல் விமர்சனத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் பிரிக்கிறது என காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம் ரொம்பவும் கதறாதீங்க.. கோவா மக்கள் மீது நம்பிக்கை வையுங்க என கூறியுள்ளார்.
கோவா சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கோவாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. 2017 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், பாஜகவில் இணைந்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.

கருத்து கணிப்புகள்
எஞ்சியிருந்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் இழுத்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்; ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சியாக அதிக இடங்களில் வெல்லும் என்கின்றன கருத்து கணிப்புகள்.

உருவாகுமா மெகா அணி?
இதனிடையே மகாராஷ்டிராவைப் போல மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை தரப்பில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒன்னமும் ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ப.சிதம்பரம் விமர்சனம்
ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், கோவாவில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். கோவாவில் பாஜக- காங்கிரஸ் இடையேதான் போட்டி. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவை பாஜக அல்லாத வாக்குகளை பிரிக்கின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் எனில் கோவா மக்கள், காங்கிரஸுக்குதான் வாக்களிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கெஜ்ரிவால் பதிலடி
இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம் கதறி அழுவதை நிறுத்த வேண்டும். பாஜக மீதான அதிருப்தியால் வெல்வோம் என அதாவது பாஜக மீது நம்பிக்கை வைத்திருக்கிறது காங்கிரஸ். பாஜக மீது நம்பிக்கை வைக்காமல் கோவா மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் 17 எம்.எல்.ஏக்களில் 15 பேர் பாஜகவில்தான் உள்ளனர் என கூறியுள்ளார்.
-
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு!












Click it and Unblock the Notifications