ப.சிதம்பரம் சார் ரொம்ப கதறாதீங்க... கோவா தேர்தல் விமர்சனத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் பிரிக்கிறது என காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம் ரொம்பவும் கதறாதீங்க.. கோவா மக்கள் மீது நம்பிக்கை வையுங்க என கூறியுள்ளார்.
கோவா சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கோவாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. 2017 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், பாஜகவில் இணைந்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.

கருத்து கணிப்புகள்
எஞ்சியிருந்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் இழுத்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்; ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சியாக அதிக இடங்களில் வெல்லும் என்கின்றன கருத்து கணிப்புகள்.

உருவாகுமா மெகா அணி?
இதனிடையே மகாராஷ்டிராவைப் போல மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை தரப்பில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒன்னமும் ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ப.சிதம்பரம் விமர்சனம்
ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், கோவாவில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். கோவாவில் பாஜக- காங்கிரஸ் இடையேதான் போட்டி. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவை பாஜக அல்லாத வாக்குகளை பிரிக்கின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் எனில் கோவா மக்கள், காங்கிரஸுக்குதான் வாக்களிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கெஜ்ரிவால் பதிலடி
இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம் கதறி அழுவதை நிறுத்த வேண்டும். பாஜக மீதான அதிருப்தியால் வெல்வோம் என அதாவது பாஜக மீது நம்பிக்கை வைத்திருக்கிறது காங்கிரஸ். பாஜக மீது நம்பிக்கை வைக்காமல் கோவா மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் 17 எம்.எல்.ஏக்களில் 15 பேர் பாஜகவில்தான் உள்ளனர் என கூறியுள்ளார்.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications