பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு
பனாஜி/டேராடூன்: பாஜக ஆட்சியில் இருக்கும் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இம்மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது கோவா மாநிலம். இம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த 40 தொகுதிகளில் மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா தேர்தலில் மொத்தம் 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2997. 41 பேர் பாலியல் தொழிலாளர்கள். 9 பேர் திருநங்கைகள்.

கோவா தேர்தல் பாஜக
கோவா மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.

காங். எதிர்காலம்
இதன் தொடர்ச்சியாக கடந்த 5 ஆண்டுகளில் கொத்து கொத்தாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டது பாஜக. எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் இழுத்துக் கொண்டது. இதனால் இம்மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.

கோவா தேர்தல் கருத்து கணிப்புகள்
கோவா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள் கிடைக்குமாம். அதுவும் ஆம் ஆத்மியை விட காங்கிரஸுக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். திரிணாமுல் காங்கிரஸ், கோவா மாநிலத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கின்றன கருத்து கணிப்புகள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது. கோவா விடுதலை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு குறித்து விமர்சித்தது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாஜகவின் கருத்து. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. கோவா தேர்தலில் சுற்றுலா துறை, சுரங்க தொழில், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை விவகாரங்கள் பிரதான விவாதப் பொருட்களாக இடம்பெற்றுள்ளன. நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க பெருமளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

உத்தரகாண்ட் தேர்தல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 564 பேர் ஆண்கள்; பெண் வேட்பாளர்கள் 62 பேர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications