பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு
பனாஜி/டேராடூன்: பாஜக ஆட்சியில் இருக்கும் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இம்மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது கோவா மாநிலம். இம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த 40 தொகுதிகளில் மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா தேர்தலில் மொத்தம் 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2997. 41 பேர் பாலியல் தொழிலாளர்கள். 9 பேர் திருநங்கைகள்.

கோவா தேர்தல் பாஜக
கோவா மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.

காங். எதிர்காலம்
இதன் தொடர்ச்சியாக கடந்த 5 ஆண்டுகளில் கொத்து கொத்தாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டது பாஜக. எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் இழுத்துக் கொண்டது. இதனால் இம்மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.

கோவா தேர்தல் கருத்து கணிப்புகள்
கோவா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள் கிடைக்குமாம். அதுவும் ஆம் ஆத்மியை விட காங்கிரஸுக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். திரிணாமுல் காங்கிரஸ், கோவா மாநிலத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கின்றன கருத்து கணிப்புகள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது. கோவா விடுதலை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு குறித்து விமர்சித்தது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாஜகவின் கருத்து. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. கோவா தேர்தலில் சுற்றுலா துறை, சுரங்க தொழில், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை விவகாரங்கள் பிரதான விவாதப் பொருட்களாக இடம்பெற்றுள்ளன. நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க பெருமளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

உத்தரகாண்ட் தேர்தல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 564 பேர் ஆண்கள்; பெண் வேட்பாளர்கள் 62 பேர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications