இனி ஆதார் இல்லாமல் திருமண இணையதளங்களில் பதிவு செய்ய முடியாது
டெல்லி: திருமண இணையதளங்களில் தங்கள் பெயரை பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டை இல்லாமல் இனி பதிவு செய்ய முடியாது.
நவீன யுகத்தில் திருமணங்கள் மேட்ரிமோனி எனப்படும் திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமண வயதில் உள்ள ஆண்களும், பெண்களும் அத்தைகைய இணையதளங்களில் தங்களின் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்கிறார்கள். இந்நிலையில் திருமண இணையதளங்களில் பெயரை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் கேவை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரின் பின்னணி பற்றி விசாரிக்காமல் உபேர் நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்தது. இந்நிலையில் தான் திருமணம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை தவிர்க்க மேனகா இந்த உத்தரவிட்டுள்ளார்.
திருமண இணையதளங்களில் ஏற்கனவே திருமணமானவர்கள் உள்ளிட்ட மோசடிக்காரர்கள் தங்களின் செல்போன் எண்ணை மட்டும் அளித்து பெயரை பதிவு செய்கிறார்கள். அவர்களை நம்பி தொடர்பு கொள்ளும் பெண்களின் வாழ்க்கை நாசமாகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டால் ஆண்கள் தங்கள் புகைப்படத்துடன் தான் பெயரை பதிவு செய்ய முடியும். மேலும் இணையதளத்தில் பல்வேறு கணக்குகள் வைத்து பெண் தேட முடியாது.
இது குறித்து பாரத்மேட்ரிமோனி. காமின் சிஇஓ முருகவேல் கூறுகையில்,
ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது சிக்கலாகிவிடும். பலர் தங்களின் பிரைவசியை மதிப்பவர்கள். சிலரிடம் அடையாள அட்டை கூட இல்லை என்றார்.
ஷாதி.காம் சிஇஓ அனுபம் மிட்டல் கூறுகையில்,
திருமண இணையதளங்களில் பெயரை பதிவு செய்ய ஆதார் அட்டை தேவை என்று அரசு கூறினால் அதை ஏற்கத் தான் வேண்டும். ஆனால் எத்தனை பேரிடம் ஆதார் அட்டை உள்ளது. உத்தரவிடும் முன்பு அனைவரும் ஆதார் அட்டை வைத்துள்ளார்களா என்பதை அரசு சரிபார்க்க வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications