4,660 டன் பருப்பினை விற்கும் மத்திய அரசு - மக்களுக்கு தாராளமாக கிடைக்க நடவடிக்கை
டெல்லி: இந்தியாவில் 4 ஆயிரத்து 660 டன் பருப்பினை சந்தையில் மத்திய அரசு ஏலத்தின் மூலம் விற்பனை செய்துள்ளது. மக்களுக்கு பருப்பு தாராளமாக கிடைக்கிற வகையிலும், விலை குறையும் வகையிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பருப்பு விளைச்சலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதுமான மழை இல்லாததாலும், பருவம் தவறி பெய்த மழையாலும் பருப்பு உற்பத்தி பாதித்தது.

2013-14 பயிர் ஆண்டில் 1 கோடியே 92.5 லட்சம் டன் பருப்பு உற்பத்தி ஆனது. இது 2014-15 பயிர் ஆண்டில் 1 கோடியே 72 லட்சம் டன்னாக சரிவு அடைந்தது.
இதன் காரணமாக பருப்பு விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ துவரம் பருப்பு விலை ரூபாய் 225 என்ற உச்சத்தை தொட்டது. இதையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. நாடு முழுவதும் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டது.
இதன்மூலம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 828 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது. 12 ஆயிரத்து 506 இடங்களில் நடந்த சோதனைகளில் இந்த பருப்பு சிக்கியது. இதில் டெல்லி, ஒடிசா, கர்நாடகம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 35 ஆயிரத்து 761 டன் பருப்பும் அடங்கும். இதனையடுத்து இவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications