நாய் கறிக்கு நாகாலாந்து அரசு விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்த கவுஹாத்தி உயர்நீதிமன்றம்
கவுஹாத்தி: நாய் கறிக்கு நாகாலாந்து அரசு தடைவித்த நிலையில் அதற்கு கவுஹாத்தி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்தில் நாய்களின் இறைச்சியை உண்பதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என பல காலமாக விலங்குகள் நல அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நாகாலாந்து அரசு நாய் கறியை விற்பதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்தது. இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் வெளியான ட்விட்டரில் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத வர்த்தக ரீதியில் நாய் கறியை இறைச்சி செய்வதற்கும் , அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதை அந்த மாநில தலைமை செயலாளர் தேம்ஜன் டாய் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை 201 சட்டம்தான் காரணம் என அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு அந்த மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது நாய் கறி மீதான தடையானது மாநிலத்தின் பாரம்பரிய கலாசாரத்திற்கு எதிரானது என மாநிலத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இதில் மருத்துவ தன்மையும் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இதையடுத்து அரசின் உத்தரவை எதிர்த்து கவுகாத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நாகாலாந்து அரசின் தடைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் அடுத்த கட்ட விசாரணை குளிர்கால விடுமுறைக்கு பிறகு தொடங்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications