இமாச்சலில் வெற்றிக்கனியை ருசித்த பாஜக - ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்
இமாசல பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
Recommended Video

சிம்லா: இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. பாஜக வெற்றிவாகை சூடி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி பரிதாபமாக ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
காலையில் இருந்தே பாஜக, காங்கிரஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் கடுமையாக போராடின. 11 மணிக்கு மேல் பாஜகவின் பக்கமே வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் முன்னணி நிலவரங்கள் வெளியாகின.

68 தொகுதிகளைக் கொண்ட இமாசல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜகவிற்கு 38 இடங்கள் கிடைத்தன. ஆளும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களை மட்டுமே பிடித்தது.
இமாசல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி இமாசல பிரதேசத்தில் வெற்றியை தக்க வைக்க கடுமையாக போராடியது. இறுதியில் தோல்வியே பரிசாக கிடைத்தது.
தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்பதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத், இமாச்சலத்தில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications