சீனாவுடனான எல்லை பிரச்சனை... எரியும் நெருப்பில் எண்ணெயை தொடர்ந்து ஊற்றும் பாகிஸ்தான்!
சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை பாகிஸ்தான் ஊடகங்கள் ஊதி பெரிதாக்குவதாகவும், பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: சீனாவுடன் நீடிக்கும் எல்லை பிரச்சனையை பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் பெரிதாக்கி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அணையாமல் பார்த்துக்கொள்கின்றன என்று கொந்தளிக்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்.
சீனாவுடனான எல்லை பிரச்சனையை தீர்த்துக்கொள்ள அரசியல் ரீதியாக தீர்வுகாண மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தகவல்கள் அளித்துள்ள இந்திய ராணுவ அதிகாரிகள், "எல்லைப் பிரச்சனை முடியக்கூடாது என்று பாகிஸ்தான் நினைக்கிறது. அதற்காக பாகிஸ்தான் ஊடகங்களை அந்நாட்டு ராணுவம் பயன்படுத்திக்கொள்கிறது. மேலும் இந்தச் சதிச் செயலில் ஐஎஸ் தீவிரவாதிகளும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது.

துன்யா டிவியில், டோக்லாம் பகுதியில் 158 இந்திய வீரர்களை சீனா ராணுவ தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே போல டான் டிவியிலும் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள், போலி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது முற்றிலும் போலியானவை என்றும், உண்மையில் டோக்லாம் களநிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படியாவது இந்தியாவையும், சீனாவையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது.
இது மட்டுமில்லாமல், ஏவுகணைகளை இந்திய எல்லையில் சீனா நிறுத்தியுள்ளதாகவும் செய்திகள், படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. இதுவும் பாகிஸ்தான் ராணுவம் போலியாக தயாரித்த செய்தி என்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கு அவர்களும் இவை போலியான செய்திகள்தான் என்று உறுதிப்படுத்தியதாகவும் தெரிகிறது." என்று கூறினர்.
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications