ஹைதராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ- 8 பேர் கருகி பலி
செகந்திரபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நேற்று இரவு எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ரூபி எலக்ட்ரிக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோ ரூமில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பக்கத்து கட்டிடங்களுக்கும் பரவியது.
இதனால் ஷோ ரூம்-க்கு மேலே இருந்த லாட்ஜ், ஹோட்டல் ஆகியவற்றில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் தீயில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், எலக்ட்ரிக் ஷோ ரூம் தரை தளத்தில் செயல்பட்டு வந்தது. சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்து மேல் மாடிகளுக்கும் பரவியது இந்த தீ விபத்தில் மொத்தம் 24 பேர் சிக்கி இருந்தனர். இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணம் அடைந்தனர் என்றனர்.
இச்சம்பவம் குறித்து தெலுங்கானா அமைச்சர் முகமது அலி கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க கடுமையாகப் போராடிப் பார்த்தனர். ஆனால் கடும் புகையால் சிலர் உயிரிழந்துவிட்டனர். லாட்ஜில் இருந்த பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications