வளர்ப்பு மகளுடன் ராம் ரஹீம் தகாத உறவு.. நேரில் பார்த்ததாக மருமகன் திடுக் பேட்டி!
டெல்லி: போலிச்சாமியார் ராம் ரஹீம் ஒரு பெண்ணை தத்து எடுத்து அவருடனும் தகாத உறவு வைத்துக்கொண்ட தகவல் அம்பலமாகியுள்ளது.
ராம் ரஹீம், ஹனிப்ரீத் இன்சான் என்ற இளம் பெண்ணை தத்து எடுத்திருந்தார். இவர்தான் தேரா சச்சா அமைப்பின் அடுத்த வாரிசு எனக் கூறப்படுகிறது. ராம் ரஹீமுடன் பல இடங்களுக்கு இவரும் சென்று வந்துள்ளார்.
பளிச்சென்ற வெள்ளை நிறம் இவரின் அடையாளம். இவருக்கும், விஸ்வாஸ் குப்தா என்பவருக்கும் 1999ம் ஆண்டு திருமணமானது. ஆனால் இதன்பிறகுதான் விஸ்வாஸ் குப்தாவுக்கு தனது மனைவியும், அவரின் வளர்ப்பு தந்தையும் அடிக்கும் லூட்டிகள் தெரிய வந்தன.

விவாகரத்து
இந்த கேவலத்தை பார்த்து மனது நொந்த விஸ்வாஸ் 2011ல் தனது மனைவியை விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இப்போது அந்த பழைய அசிங்கங்களை நிருபர்கள் முன்னிலையில் கொட்டி தீர்த்துள்ளார் விஸ்வாஸ்.

குகையில் கொடுமை
விஸ்வாஸ் குப்தா கூறுகையில், "ராம் ரஹீமின் தனியறை கூஃபா எனப்படும் குகையாகும். எனது மனைவி அவரோடு பணிவிடை செய்வதாக கூறிக்கொண்டு இருந்தார். ஒருநாள் நான் யதேர்ச்சையாக அந்த பக்கம் சென்றபோது, இருவரும் உடலுறவு வைத்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். என்னை பார்த்துவிட்ட ராம் ரஹிம், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்" என்றார்.

அடக்கொடுமையே
நானும் எனது மனைவியும் ராம் ரஹீம் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வோம். ஆனால், ஒருநாளும் என்னோடு எனது மனைவியை உறங்க அவர் அனுமதித்தது கிடையாது. எப்போதுமே, எனது மனைவியுடன் ராம் ரஹீம் ஒரே அறையில் படுப்பதுதான் வழக்கமாக வைத்திருந்தார்.

உலகை ஏமாற்ற நாடகம்
ஹனிப்ரீத் அழகில் மயங்கி, தத்து என்ற பெயரில் கெட்ட நோக்கத்தை நிறைவேற்ற தன்னோடு வைத்துக்கொண்டவர்தான் ராம் ரஹிம். இவ்வாறு விஸ்வாஸ் குப்தா தெரிவித்துள்ளார். தேரா சச்சா ஆதரவாளர்கள் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஸ்வாஸ் குப்தா.

மறுப்பு
தேரா சச்சா ஆதரவாளர்களோ, இவரது குற்றச்சாட்டை மறுத்துவருகிறார்கள். அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று தேரா சச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. போலி சாமியார் ராம் ரஹீம் பற்றி இன்னும் என்னென்ன வெடிகுண்டுகள் வெளியே வரப்போகிறதோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications