டிடிவி தினகரனின் 'புரோக்கர்’ சுகேஷின் 8 சொகுசு கார்கள் கொச்சியில் பறிமுதல்
தினகரனின் புரோக்கர் சுகேஷின் 8 சொகுசு கார்கள் கொச்சியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு: அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்கு இரட்டை இலை சின்ன விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் நண்பரிடம் இருந்து 8 வெளிநாட்டு சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாக கூறி தினகரனுக்கு புரோக்கராக செயல்பட்டு சிக்கியவர் சுகேஷ். தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சுகேஷ்.

இந்நிலையில் கடந்த 8, 10 தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் அதிரசி சோதனை நடத்தினர். சுகேஷின் முக்கிய கூட்டாளி நவாஸை இலக்கு வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் நவாஸ் சொகுசு கார்களை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 8 சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இந்த சொகுசு கார்கள் சுகேஷூக்கு சொந்தமானவையா? அல்லது வேறு யாருக்காகவும் சுகேஷ் வாங்கி பதுக்கி வைத்திருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சசிகலா குடும்பமும் சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. திவாகரனின் மகள் ராஜமாதங்கி பெயரில் இந்த கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications