For Daily Alerts
Just In
85 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல்!!
டெல்லி: இந்திய சிறைகளில் இருக்கும் 85 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இலங்கை சிறைகளில் இருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதைப் போன்று இந்திய சிறைகளில் இருந்து இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒடிஷா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறைகளில் இருக்கும் 85 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட இருக்கின்றனர்.
Comments
English summary
India has agreed to release 85 Sri Lankan fishermen who are lodged in different jails in Odisha and Andhra Pradesh. This was conveyed to Sri Lanka president Mahinda Rajapaksa when he met Prime Minister Narendra Modi yesterday.
Story first published: Wednesday, May 28, 2014, 9:54 [IST]