ஊடகங்களை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது.. துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்
இந்தியாவில் செயல்படும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது கூடாது என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஜனநாயக நாட்டுக்கு, ஊடகங்களின் செயல்பாடு மிகவும் அவசியம். ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது' என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு 1938ம் ஆண்டில் தொடங்கிய 'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக, பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மீது, சு.சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டில், தன் செயல்பாடுகளை, அந்த பத்திரிகை நிர்வாகம் நிறுத்தியது. இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அந்த பத்திரிகையை மீண்டும் வெளியிட, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு மீண்டும் தொடங்கியது.
பெங்களூரில் நேற்று நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்ட்ஸ் பத்திரிகையை வெளியிட, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
அப்போது துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேசுகையில், " நாட்டின் விடுதலைக்காக 'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் முக்கிய பங்காற்றியது. ஜனநாயக நாட்டிற்கு, ஊடகம் மிகவும் அவசியம். யாரும் ஊடகத்தை கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது." என்று கூறினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, " நாட்டின் பாதுகாப்புக்காக, இந்திய ராணுவத்தினர், பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்களை காங்கிரசார், தவறாக பேசக்கூடாது. விவசாயிகள், ஏழைகள், சிறுபான்மையினரை, பாஜக கண்டுகொள்ளவில்லை. ஆண்டுதோறும், இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவதாக கூறிய மோடி அரசு, எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தின் பெயர்களை மாற்றி பாஜக அரசு செயல்படுகிறது" என்றார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications